ஜெ. மரணம் குறித்து மாதவனிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்தது ஏன்?: நாஞ்சில் சம்பத் கேள்வி
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் நம்பகத்தன்மை குறித்து நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து தீபாவின் கணவர் மாதவனிடம் எதற்காக ஆறுமுகசாமி கமிஷன் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போதில் இருந்து அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகின்றன. அவரது மரணம் குறித்த உண்மைகளை விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோவை ஊடகங்கள் மூலமாக வெளியிட்டார். நாளை ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோ வெளியானதால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த வீடியோ தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே வெளியிடப்பட்டதாக அ.தி.மு.க.,வினரும், தினகரனிடம் அளிக்கப்பட்ட வீடியோ எப்படி வெற்றிவேலிடம் போனது என்று சசிகலாவின் குடும்பத்தினரும் தினகரன் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், டி.டி.வி தினகரன் அணியின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் மீது நம்பகத்தன்மை இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்தாமல் ஜெயலலிதாவிற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத தீபாவின் கணவர் மாதவனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன ? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், திட்டமிட்டே விசாரணை கமிஷன் திசை திருப்பப்படுவதாகவும் அதற்கு பின்னால் இருப்பவர்களை இந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டு உள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications