தொல்லை தரும் கிரண்பேடி... கருணாநிதி வலியுறுத்திய மாநில சுயாட்சி தேவை : நாராயணசாமி கோரிக்கை
Recommended Video

சென்னை: புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தரும் தொல்லையைப் பார்க்கும்போது கருணாநிதி வலியுறுத்திய மாநில சுயாட்சியை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியானது சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில் கட்சித் தலைவராக, முதல்வராக இருந்து தமிழகத்தை கட்டிக் காத்தவர் கருணாநிதி.
எல்லோரையும் ஈர்க்கக் கடிய சக்தி வாய்ந்த பேச்சாளர் கருணாநிதி. தமிழக மக்கள் வாழ வேண்டும் என்று பாடுபட்ட தலைவர். தமிழர்களுக்கு இன்னல் இழைக்கப்பட்டபோதெல்லாம் கருணாநிதியின் குரல் ஒலித்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்து காட்டியவர் கருணாநிதி. சமூக நீதியில் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையுடன் பெரியார் வழியில் வாழ்ந்து காட்டியவர் கருணாநிதி. கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி.
கிரண்பேடி தரும் தொல்லையைப் பார்க்கும்போது மாநில சுயாட்சியை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதை உறுதியாக சொல்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள உரிமையை யாரும் பறிக்கக் கூடாது என்று போராடியவர் கருணாநிதி.
கருணாநிதி இல்லாமல் சட்டசபைக் கூட்டம் நடந்ததில்லை. மக்கள் பிரச்சினைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறி பாடுபட்டவர் கருணாநிதி. கருணாநிதி மறைந்தபோது அமைச்சரவையைக் கூட்டி முதல் இரங்கல் தீர்மானத்தை புதுச்சேரிதான் நிறைவேற்றியது.
கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்கும் அறிவிப்பையும் வெளியிட்டோம். காரைக்கால் பகுதியிலும் தெருக்களுக்குப் பெயர் வைத்துள்ளோம். புதுச்சேரி பல்கலையில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைத்துள்ளோம். உலகத் தமிழர்களால் போற்றப்படும் தலைவர் கருணாநிதி.
இப்படிப்பட்ட தலைவரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். ஸ்டாலின் தலைமையில் தமிழகம் வளம் பெறும் என்றார் நாராயணசாமி.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications