தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 3 கோடி போதைப்பொருள்- 4 பேர் கைது
சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்ததாக 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் எச்.ஏ-1 பெட்டியில் சென்னைக்கு போதை பொருட்கள் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை முதலே அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் காலை 7.10 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணான வகையில் பதில் அளித்தனர்.
அவர்களுடைய உடைமைகள் சோதனை செய்யப்பட்டதில் ‘ஆம்பெடமைன்' என்ற தடை செய்யப்பட்ட போதை பொருள் 25.160 கிலோ மற்றும் 32 லட்சத்து 85 ஆயிரம் ‘ஜோல்பிடெம்' மாத்திரைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆம்பெடமைன் பவுடர் ஆண்மை உணர்ச்சியை தூண்ட பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் என்பதும், ‘ஜோல்பிடெம்' மாத்திரைகள் கட்டாய தூக்கத்துக்கு நோயாளிகள் பயன்படுத்துவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றை வியாபார நோக்கத்தோடு டெல்லியிருந்து சென்னை ஏழுகிணறில் உள்ள மருந்து கிடங்கிற்கு கொண்டுவந்தோம் என்று அந்த நபர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ கிடங்கிற்கு சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்கள் மற்றும் மருந்து-மாத்திரைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்திவந்த குற்றத்துக்காக காதர்மொகிதீன் முகமதுஅலி ஜின்னா, ஜாகீர் உசேன் மற்றும் மருந்து கிடங்கில் வேலைபார்த்த சையது இப்ராகிம், சாகுல்அமீது ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது போதை பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் மாத்திரைகளின் மதிப்பு ரூ.3 கோடி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications