தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு மோடி பதில் கடிதம்!
சென்னை: ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமார், தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பணி நிமித்தமாக ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். அவரை தாலிபன் தீவிரவாதிகள் சிலர் கடந்த 2 ஆம் தேதியன்று கடத்திச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து அவரை மீட்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர்.
மேலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் கடிதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக உறுதி அளித்துள்ளார்.
காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் அலுவலகத்துடன் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வருவதாகவும், தாமும் இது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த கடிதத்தில் மோடி தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications