சென்னையிலிருந்து கேரளாவுக்குப் போனார் மோடி
சென்னை:சென்னையில் நடைபெற்ற பா.ஜ.கவினரின் பொது கூட்டத்திற்கு வந்திருந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது சென்னை பயணத்தை முடித்து விட்டு கேரளா புறப்பட்டுச் சென்றார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொது கூட்டத்தில் கலந்துகொண்டார் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

இன்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர்,அனைத்து சென்னை நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு பிற்பகலில் தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் அவரை தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ், இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.
கொச்சியில் இன்று மாலை நடைபெறும் கேரள புலையர் சமூக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் அவர் பிறகு திருவனந்தபுரம் சங்குமுகத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications