அதிமுக அமைப்புச் செயலர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் திடீர் டிஸ்மிஸ்!
சென்னை: அதிமுக அமைப்புச் செயலர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக அரசில் ஐவர் அணியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக கோலோச்சியவர் நத்தம் விஸ்வநாதன். ஆனால் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் ஆட்சியின் கடைசி காலத்தில் நத்தம் விஸ்வநாதன் ஓரம்கட்டப்பட்டார்.

சட்டசபை தேர்தலில் அவரால் வெல்ல முடியாத அளவுக்கு ஆத்தூர் தொகுதியில் திண்டுக்கல் ஐ. பெரியசாமியை எதிர்த்து நிற்க வைத்தார் ஜெயலலிதா. அவர் எதிர்பார்த்தபடியே நத்தம் விஸ்வநாதன் வெல்லவில்லை.
அவரிடம் இருந்த திண்டுக்கல் மாவட்ட செயலர் பதவியையும் பறித்தார் ஜெயலலிதா. திடீரென நத்தம் விஸ்வநாதனை அதிமுக அமைப்புச் செயலராக்கினார்.
நத்தம் விஸ்வநாதனின் நண்பர் வீடுகளில் அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருந்தனர். இதனிடையே இன்று நத்தம் விஸ்வநாதனின் வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அதிமுக அமைப்புச் செயலர் பதவியில் இருந்து நத்தம் விஸ்வநாதன் விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications