For Daily Alerts
Just In
கருணாநிதி மறைவு.. தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது தேசியக்கொடி
கருணாநிதி மறைவையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
சென்னை: கருணாநிதி மறைவையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர். 13 முறை சட்டசபை உறுப்பினராக பதவி வகித்தவர் கருணாநிதி.
தமிழகம் மட்டுமின்றி நாட்டின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
Comments
English summary
National flag flys in half post in Tamilnadu Secretariat to pay tribute Karunanidhi.
Story first published: Wednesday, August 8, 2018, 6:22 [IST]