சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிதம்பரம் அருள்மிகு நடராஜர்
கோவிலின் கோபுரத்தில் தேசியக்கொடி ஆகஸ்ட் 15ம் தேதி (ஞாயிறு) ஏற்றப்பட்டது.
இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோயிலின் கோபுரத்தின் மீது ராஜா கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு.

அன்றைய தினம் அதிகாலையில் நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள்.
பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்கிறார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். இந்த ஆண்டும் வழக்கம் போல் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications