For Daily Alerts
Just In
காரைக்குடி பள்ளி மாணவர்களின் கண்கவர் நவராத்திரி விழா
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா 20.10.2015 அன்று கொண்டாடப்பட்டது.
விழா தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கிராமக் கல்விக் குழுத் தலைவர் கரு.ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகு சுந்தரி கலந்து கொண்டனர்.
பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி வரவேற்றார். இவ்விழாவில் விநாயகர், சரஸ்வதி, அனுமன், சாய்பாபா, கிருஷ்ணர்-ராதை, விலங்கு மற்றும் பறவை பொம்மைகள், ரோபோ, பழ மாதிரிகள் ஆகியவைகள் கொலுவில் மாணவர்களால் அமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
விழாவில் மாணவர்கள் பக்திப் பாடல்கள் பாடினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் அனுராதா செய்திருந்தார். விழாவின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.
English summary
Navarathiri festival was held in Ramanathan chettiyar municipal high school at Karaikudi. Students, Teachers partcipated the event en masse.
Story first published: Thursday, October 22, 2015, 11:05 [IST]