நவராத்திரி: கலாம், ஜெயலலிதா, பண மரம், ஏடிஎம் இந்த ஆண்டு ஸ்பெஷல்
நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்கியது. இந்த ஆண்டு கொலுவில் அப்துல் கலாம், ஜெயலலிதா, பணம் காய்க்கும் மரம், ஏடிஎம் ஆகியவை கொலுவில் இடம் பெற்றுள்ளது.
சென்னை: இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான நவராத்திரி பண்டிகை இன்று தொடங்கியுள்ளது. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக வைக்கப்பட்டுள்ள கொலுவில் அப்துல் கலாம், ஜெயலலிதா பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் முக்கிய கோவில்களிலும், இல்லங்களிலும் கொலு வைத்து வீடுகளை அலங்கரித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பணமதிப்பு நீக்கத்தின் வேதனைகளை உணர்த்தும் வகையில் பணம் காய்க்கும் மரம், ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி கொலுவில் விதவிதமாக, அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள் இடம்பெறுவது வழக்கம். கடவுளர் உருவங்கள், மகான்கள், தலைவர்கள், மக்களின் வாழ்வியலைக் காட்டும் உருவங்கள் எனப் பல விதமான பொம்மைகள் கொலுவில் வைக்கப்படும். கடந்த ஆண்டு கொலு பொம்மைகளில் பாகுபலி பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.

கொலுவில் தலைவர்கள் சிலை
அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் சிலைகள் விற்பனைக்கு வந்தன. அவற்றை வைத்து சுதந்திரப் போராட்ட காட்சிகளை கொலுவில் வைத்தார்கள்.

ஜெயலலிதா பொம்மை
இந்த ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொம்மை விற்பனைக்கு வந்துள்ளது. பச்சை, சிவப்பு என விதவிதமான வண்ணங்களில் சிலைகள் விற்கப்படுகின்றன

கொலுவில் கற்பனை
கொலு வைப்பதற்கென சில வரையறைகளை நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆயினும் இளம் தலைமுறை, தங்கள் கற்பனைக்கேற்ப விதவிதமான பொம்மைகளை வாங்கி வைத்து வித்தியாசமான கொலுக்களை அமைக்கிறார்கள்.

துர்கா பூஜை
மேற்கு வங்க மாநிலம் முழுவதும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிரமாண்ட துர்கா சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பணமதிப்பு நீக்கம்
இந்த ஆண்டு துர்கா பூஜையில் மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பும் அதனால் மக்கள் பட்ட அவதி குறித்த காட்சிகளும் முக்கிய இடம் பிடித்துள்ளன. கொல்கத்தாவின் பேலிகாடா பகுதியில் செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டு மாதிரியில், பணம் காய்க்கும் மரத்தை வடிவமைத்துள்ளனர்.
|
ஏடிஎம் மிஷின்கள்
பண மரத்தின் பொதுமக்கள், கண்ணீர் விட்டு அழுவது போன்ற சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏடிஎம் மிஷின்கள் போன்ற சிலைகளை வைத்து, செல்லாத ரூபாய் நோட்டால் ஏற்பட்ட பாதிப்பை சித்தரித்துள்ளனர்.

வித விதமான சுண்டல்
மாலையில் கொலு முன்பாக பூஜை செய்து பக்திப்பாடல்களைப் பாடி அம்மனுக்கு விதம் விதமான சுண்டல்களை படைத்து வழிபட்டு அனைவரும் கொடுத்து மகிழ்வார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications