நவராத்திரி: கலாம், ஜெயலலிதா, பண மரம், ஏடிஎம் இந்த ஆண்டு ஸ்பெஷல்
நவராத்திரி பண்டிகை இன்று முதல் தொடங்கியது. இந்த ஆண்டு கொலுவில் அப்துல் கலாம், ஜெயலலிதா, பணம் காய்க்கும் மரம், ஏடிஎம் ஆகியவை கொலுவில் இடம் பெற்றுள்ளது.
சென்னை: இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான நவராத்திரி பண்டிகை இன்று தொடங்கியுள்ளது. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக வைக்கப்பட்டுள்ள கொலுவில் அப்துல் கலாம், ஜெயலலிதா பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் முக்கிய கோவில்களிலும், இல்லங்களிலும் கொலு வைத்து வீடுகளை அலங்கரித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பணமதிப்பு நீக்கத்தின் வேதனைகளை உணர்த்தும் வகையில் பணம் காய்க்கும் மரம், ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி கொலுவில் விதவிதமாக, அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள் இடம்பெறுவது வழக்கம். கடவுளர் உருவங்கள், மகான்கள், தலைவர்கள், மக்களின் வாழ்வியலைக் காட்டும் உருவங்கள் எனப் பல விதமான பொம்மைகள் கொலுவில் வைக்கப்படும். கடந்த ஆண்டு கொலு பொம்மைகளில் பாகுபலி பொம்மைகள் இடம் பெற்றிருந்தன.

கொலுவில் தலைவர்கள் சிலை
அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் சிலைகள் விற்பனைக்கு வந்தன. அவற்றை வைத்து சுதந்திரப் போராட்ட காட்சிகளை கொலுவில் வைத்தார்கள்.

ஜெயலலிதா பொம்மை
இந்த ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொம்மை விற்பனைக்கு வந்துள்ளது. பச்சை, சிவப்பு என விதவிதமான வண்ணங்களில் சிலைகள் விற்கப்படுகின்றன

கொலுவில் கற்பனை
கொலு வைப்பதற்கென சில வரையறைகளை நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆயினும் இளம் தலைமுறை, தங்கள் கற்பனைக்கேற்ப விதவிதமான பொம்மைகளை வாங்கி வைத்து வித்தியாசமான கொலுக்களை அமைக்கிறார்கள்.

துர்கா பூஜை
மேற்கு வங்க மாநிலம் முழுவதும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. மாநிலத்தின் பல பகுதிகளிலும், பிரமாண்ட துர்கா சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பணமதிப்பு நீக்கம்
இந்த ஆண்டு துர்கா பூஜையில் மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பும் அதனால் மக்கள் பட்ட அவதி குறித்த காட்சிகளும் முக்கிய இடம் பிடித்துள்ளன. கொல்கத்தாவின் பேலிகாடா பகுதியில் செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டு மாதிரியில், பணம் காய்க்கும் மரத்தை வடிவமைத்துள்ளனர்.
|
ஏடிஎம் மிஷின்கள்
பண மரத்தின் பொதுமக்கள், கண்ணீர் விட்டு அழுவது போன்ற சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஏடிஎம் மிஷின்கள் போன்ற சிலைகளை வைத்து, செல்லாத ரூபாய் நோட்டால் ஏற்பட்ட பாதிப்பை சித்தரித்துள்ளனர்.

வித விதமான சுண்டல்
மாலையில் கொலு முன்பாக பூஜை செய்து பக்திப்பாடல்களைப் பாடி அம்மனுக்கு விதம் விதமான சுண்டல்களை படைத்து வழிபட்டு அனைவரும் கொடுத்து மகிழ்வார்கள்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications