சிறுத்தை புலி நடமாடுவதாக தகவல்... பீதியில் தாம்பரம் பகுதி மக்கள்!

தாம்பரம் பீர்க்கன்கரணை அடுத்து உள்ளது சதானந்தபுரம். சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதிக்கு அருகில் வண்டலூர் உயிரியல் பூங்காவையொட்டிய வனப் பகுதி அமைந்துள்ளது. சதானந்தபுரத்தை அடுத்து நெடுங்குன்றம் கிராமம் உள்பட பல கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்றிரவு வன ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள பீர்க்கன்கரணை நெடுங்குன்றம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார் சதானந்தபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர். அப்போது மான் ஒன்று வேகமாக சாலையைக் கடந்ததை அவர் கண்டுள்ளார். உடனடியாக மான் ஓடிவந்த திசையில் காட்டுக்குள் பார்த்த போது, அங்கு சுமார் 2 அடி உயரம் 3 அடி நீளத்தில் ஒரு சிறுத்தை புலி நின்றதாகவும், ரமேசைப் பார்த்து அது மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார் ரமேஷ். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன அதிகாரி கிருஷ்ணகுமார் தனது குழுவுடன் சிறுத்தை புலியின் கால் தடம் எதுவும் பதிவாகி உள்ளதா என்று பார்த்தார். ஆனால், எதுவும் சிக்கவில்லை.
வண்டலூர் பூங்காவில் இருந்து சிறுத்தைப் புலி தப்பி வந்திருக்குமோ என்ற அப்பகுதி மக்களின் சந்தேகத்திற்கு வன அதிகாரி கிருஷ்ணகுமார், அவ்வாறு தப்பி வர வாய்ப்பில்லை எனப் பதிலளித்தார்.
மேலும், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய அவர், சிறுத்தை புலியை பிடிக்க விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் இடம் அருகே 2 கூண்டுகளும், பல இடங்களில் காமிராவும் பொருத்தப்படும் எனத் தெரிவித்தார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications