தமிழக - கேரளா எல்லையில் ரூ.40 லட்சம் பணம் சிக்கியது
புளியரை சோதனை சாவடியில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி: தமிழக - கேரளா எல்லையில் உள்ள புளியரை சோதனை சாவடியில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக, கேரளா எல்லையான புளியரை சோதனை சாவடியில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் பிரதாபன் தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்றது. இந்த சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்கள் குற்றாலத்தில் சிப்ஸ் கடை நடத்திவரும் சஜிஜான், அன்னமராசா என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் கையில் இருந்த சாக்கு பையை பிரித்து பார்த்ததில் அதில் கட்டுக்கட்டாக 2,000, 500, 100 ரூபாய் நோட்டுகள் சுமார் 40 இலட்சம் பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து நடத்திய விசாரணையில் அவர்களிடம் இருந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், நெல்லை மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக, கேரளா எல்லையில் ரூ.40 லட்சம் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications