ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நெடுவாசலில் தெர்மாகோலுடன் போராடிய மக்கள்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நெடுவாசல் பகுதி மக்கள் இன்று நூதன முறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று கீரமங்கலத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன்திட்டத்திற்கு எதிரான போராட்டம் 76ஆவது நாளை எட்டியது. இன்றைய போராட்டத்தில் கழிவுகளை தெர்மாக்கோல் வைத்து மூடி, போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications