ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலிலில் தொடரும் மக்கள் போராட்டம்!
நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடருகிறது.
புதுக்கோட்டை: நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படும் என்றும் மக்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தினர் நீண்ட நாள்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களை சமாதானம் செய்த மாவட்ட நிர்வாகத்தினரும், மத்திய அரசு பிரதிநிதிகளும் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் உறுதியளித்தனர்.

போராட்டம் வாபஸ்
அதன் பேரில் மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். தமிழக அரசும் உத்தரவாதம் அளித்ததால் மக்கள் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் சிறிது நாள்களுக்கு பின்னர் மத்திய அரசு அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்தன.

ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் 17 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மீண்டும் போராட்டம்
மீனவர் பிரச்சினை, நீட் தேர்வு, விவசாயிகள் போராட்டம் என தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைப்பதாக மக்கள் ஆவேசமடைந்தனர். இதைத் தொடர்ந்து நெடுவாசல் மக்கள் கடந்த 32 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கௌதமன் சந்திப்பு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இயக்குநர் கௌதமன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நெடுவாசல் திட்டத்தை நிறைவேற்ற வருவோரை விரட்டி அடிப்போம். பல்வேறு ஆதாயங்களுக்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு இணக்கமாக இருந்து வருகிறது. நெடுவாசலை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் மக்கள் உரிய பதிலடி தருவர் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications