சுசித்ரா விவகாரம்.. நெடுவாசல் போராட்டத்தை திசை திருப்பும் செயலா?
சென்னை: நெடுவாசல், தாமிரபரணி உள்ளிட்ட பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்கில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களை சுசித்ராவின் டிவிட்டர் மூலம் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சினிமா பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி வந்தது சுசித்ராவின் டிவிட்டர் பக்கம். ஆனால் அது ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சுசித்ரா சில தொலைக்காட்சி சேனல்களுக்கு அளித்த போன் பேட்டியில் தெரிவித்திருந்தார். அதேநேரம், இன்று காலைவரை அந்த அக்கவுண்டிலிருந்து பல டிவிட்டுகள் வெளியாகின.
நாள், தேதி குறித்து மேலும் பல போட்டோக்களை வெளியிட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. ஹேக் செய்யப்பட்டதாக சொல்லப்படும் சுசித்ராவின் பெயரில் வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இரவிலேயே வெளியிடப்படுகிறது. நெட்டிசன்கள் இதை உடனடியாக ஸ்கிரீன் ஸாட் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
நேற்று இரவு, இன்று அதிகாலை என அவ்வப்போது சுசித்ரா பெயரில் வெளியிட்டுவரும் டிவிட்டர் தகவல்கள் நெட்டிசன்கள் தூக்கத்தை கெடுத்துள்ளது. அடுத்து எந்த
பிரபலத்தின் போட்டோ அல்லது வீடியோ வருமோ என்ற எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள் உள்ளனர். அதே நேரத்தில் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா கூறி இருந்தார்.
இதுபற்றி விளக்கம் அளித்த சுசித்ரா, மர்ம நபர்களால் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டு இருக்கிறது. யாருடைய புகைப்படமும் என்னிடம் இல்லை. நான் யாரையும் இழிவுபடுத்தும் ஆள் இல்லை. முன்பும் ஒருமுறை என் டுவிட்டர் முடக்கப்பட்டது. என்னை தொடர் பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்
இந்த நிலையில் நெடுவாசல், தாமிரபரணி உள்ளிட்ட பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்கில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களை சுசித்ராவின் டிவிட்டர் மூலம் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.