சென்னை மெரினாவில் ஈழப் படுகொலை நினைவேந்தலுக்கு அனுமதி கேட்கும் தீபா !
ஈழப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திட காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: மெரினா கடற்கரை பகுதியில் ஈழப் படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திட சென்னை மாநகர் காவல் துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2009 ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் சிங்கள அரசு லட்சக்கணக்கானத் தமிழர்களை குறிப்பாக குழந்தைகள், கர்ப்பணிப் பெண்கள் உள்பட வயது வித்தியாசம் இல்லாமல் கண்முடித்தனமாக இராணுவத்தை அப்பாவியான அவர்கள் மீது ஏவி உலகம் முழுவதும் தடை செய்த குண்டுகளை குறிப்பாக கனரக பீரங்கி குண்டுகளை வீசி இனப்படுகொலை சிங்கள அரசு செய்தது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் கற்பு சூறையாடப்பட்டு கொல்லப்பட்டனர்.

இனப்படு கொலைக்கு அன்றைக்கு இந்திய நடுவண் அரசு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் ஆட்சி செய்த திமுகவும் துணைபோனது, மறைந்த ஜெயலலிதா இனப்படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடுத்ததோடு, ராஜபக்சேவை யுத்த குற்றவாளி என அறிவித்து தண்டிக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பெருமை அவர்களுக்கு உண்டு.
இனப்படுகொலையை எதிர்த்தும் அப்போரில் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் தமிழ் உணர்வாளர்கள் சென்னை மெரினாவில் நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த நினைவேந்தல் புகழ் அஞ்சலி வீரவணக்கம் நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர காவல்துறை அனுமதி அளிக்காமல் உள்ளது. மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது போல தொடர்ந்து அனுமதி அளித்திட சென்னை மாநகர் காவல் துறையினருக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications