கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரவே நீட் தேர்வாம்.. சொல்கிறார் தமிழிசை
கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வரவே நீட் தேர்வு என்று பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வரவே நீட் தேர்வு என்று பாஜக தலைவர் தமிழிசை தமிழக மாணவர்களை மேலும் குழப்பத்தில் தள்ளியுள்ளார்.
நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழக அரசு என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தும் தான்தோன்றித் தனமாக நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.
இதனால் தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்களின் எதிர்காலமே கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவ படிப்பை படிக்க ஆசைப்பட்ட அத்தனை மாணவர்களும் மன அழுத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவரவே நீட் தேர்வு என்றும் தமிழகத்தில் அரசியல்வாதிகள் தலையீட்டால் மாணவர்கள் குழம்புகின்றனர் என்றும் தமிழிசை மேலும் குழப்பியுள்ளார். அரசியல் தலையீட்டால் தமிழக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.