நீட் தேர்வு... தமிழ், ஆங்கில மொழிகளில் ஒரே வினாத்தாள் இல்லை... சிபிஎஸ்இக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
நீட் தேர்வில் தமிழ், ஆங்கில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றாக இல்லை என்ற வழக்கில் சிபிஎஸ்இ வரும் 24-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மத்திய அரசால் நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ், ஆங்கில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றாக இல்லை என்ற வழக்கில் சிபிஎஸ்இ வரும் 24-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்றால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மே 7-ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வில் 11.35 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 88,000 பேர் எழுதினர். சென்னை, புதுச்சேரி, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 8 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

ஜூன் 8 -இல் முடிவுகள்
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 8-ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்வுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பெற்றோரிடையே எரிச்சலை கிளப்பியது. தலை விரி கோலம், முழுக்கை சட்டைகள் அரைக்கையாக குறைப்பு உள்ளிட்ட ரணகளங்களால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளாடை அகற்றம்
கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்வில் மாணவி அணிந்திருந்த உள்ளாடையில் மெட்டாலிக் ஸ்டிராப் இருந்ததால் அதை அகற்றுமாறு கூறியது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இத் தேர்வில் அவரவர் மாநில மொழிகேற்ப கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது.

பாரபட்சம் என புகார்
இந்நிலையில் தமிழ், ஆங்கில மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றாக இல்லை என்றும் பாரபட்சத்துடன் கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதன் மீது இன்று நீதிபதி மகாதேவன் விசாரணை நடத்தினார்.

மே 24-இல் விளக்கம்
அப்போது நீதிபதி கூறுகையில், புகார் தொடர்பாக சிபிஎஸ்இ வாரியம் வரும் 24-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார். ஏற்கெனவே ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவர் என்ற நிலையில் இப்போது இதுபோன்ற சர்ச்சை வேறு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications