For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வால் அடுத்த மரணம்.. மருத்துவ சீட் கிடைக்காததால் சென்னையில் மாணவி தற்கொலை

சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை- வீடியோ

    சென்னை: சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே தமிழகம் அனிதா, பிரதீபா மாணவிகளை இழந்து உள்ளது. இது இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்தான் இவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது .

    இந்த நிலையில் தற்போது இன்னொரு மாணவியும் நீட் தேர்வு காரணமாக பலியாகி உள்ளார்.சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    யார் இவர்

    யார் இவர்

    இவர் சென்னையில் சோலையூரை சேர்ந்தவர். சேலையூரில் நீட் தேர்வு எழுதி போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் மருத்துவ துறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் சென்னையில் பொறியியல் சேர்ந்துள்ளார்.

    பெரிய மன உளைச்சல்

    பெரிய மன உளைச்சல்

    இந்த தனியார் கல்லூரியில் இசிஇ பிஇ படித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு படிக்க விருப்பம் இல்லாமல் பெரிய மன உளைச்சலில் இருந்துள்ளார். 3 மாதமாக மனஉளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் இருந்தவர்களிடமும் சரியாக இவர் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

    வீட்டில் தற்கொலை

    வீட்டில் தற்கொலை

    இந்த நிலையில்தான் இன்று காலை அவர் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். கதவை பூட்டிவிட்டு, ததூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் கதவை திறக்கும் போதுதான் அவரின் பெற்றோருக்கு இந்த தகவல் தெரிந்துள்ளது.

    போலீசில் புகார்

    போலீசில் புகார்

    இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவிக்கு 19 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    NEET SUICIDE: Chennai Student Angelin Shuruthi dies after failed to get a medical seat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X