நீட் தேர்வால் மாணவி தற்கொலை செய்தது பரிதாபத்துக்குரியது- ஆழ்ந்த இரங்கல்: ரஜினிகாந்த்
நீட் தேர்வால் பிரதீபா தற்கொலை செய்து கொண்டதற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை
சென்னை: நீட் தேர்வு தோல்வியால் விழுப்புரம் மாணவி தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்துக்குரியது; ஆழ்ந்த இரங்கல் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு அளித்த பேட்டி:
கர்நாடகா முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை- ஆரோக்கியமானதுதான். கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் என நம்பிக்கை இருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நான் தெரிவித்த கருத்துகள் தவறாக சித்தரிக்கப்படுகின்றன. நான் என்ன பேசினேன் என்பதை வீடியோவில் பார்த்தாலே தெரியும்.
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications