மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: தப்பி ஓடிய காமுகனுக்கு வலை வீச்சு
சென்னை: சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிய காமுகனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை சென்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பியூலா. இவரது வீட்டில் 20 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட, அவருடைய நெருங்கிய உறவு பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பியூலாவின் வீட்டின் அருகில் அரியலூரைச் சேர்ந்த பிரதீப் (25). என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மனநிலை பாதிக்கப்பட்ட பியூலாவின் உறவு பெண் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பிரதீப், பியூலா வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது, அந்த பெண் அதிர்ச்சியில் கூச்சல் போட்டார். பெண்ணின் கூக்குரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் பியூலா வீட்டுக்கு ஓடி வந்துள்ளனர். இதை கண்ட பிரதீப் அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதை தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மனநலம் பாதித்த பெண் என்று தெரிந்தும் பலாத்காரம் செய்த காமுகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications