For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலிப்பதாக கூறி சட்டக்கல்லூரி மாணவி பலாத்காரம்- சகமாணவர் கைது

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் தன்னை காதலித்த சகமாணவராலேயே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் நெல்லை சட்டக்கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

Nellai law college student raped by her lover

இவர் முதலாமாண்டு படித்த போது, அவருடன் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் படித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதையறிந்த சுதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தையடுத்து செல்வி திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். சமீபத்தில் மகாலிங்கம், சுதாவை நெல்லைக்கு அழைத்து வந்தார். பின்னர் 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ஒருநாள் சுதாவை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து சுதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மகாலிங்கத்திடம் கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் காதலிப்பதாக கூறி சுதாவை மகாலிங்கம் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

இது குறித்து சுதா பாளை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேன்மொழி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

English summary
Lover arrested for raped his girlfriend who was a law college student with him in Nellai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X