சர்வதேச யோகா தினம்... நெல்லை, மதுரை என்சிசி மாணவர்கள் 20692 பேர் பங்கேற்பு
நெல்லை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில்சுமார் 20,692 என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
முதல் சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் என்சிசி சார்பில யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சி 14 மையங்களில் நடந்தது.
நெல்லை மாவட்டத்தில் என்சிசி கர்னல் ஜய்தல் தலைமையில் பாளை ஐான்ஸ் மைதானத்தில் அரை மணி நேர யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 1600 என் சிசி மாணவர்கள் கலந்து கொணடு யோகா செய்தனர். யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிகளில் உள்ள யோகா மாஸ்டர்கள் மூலம் மாணவர்களுக்கு யோகா கற்பிக்கப்பட்டது.
தென்காசி இசக்கி வித்யாஸ்ரமம் பள்ளியில் நடந்த யோகாவை என்சிசி லெப்டினேட் கர்னல் கிருஷ்ணன் நாயர் துவங்கி வைத்தார். இதில் 1576 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இது போல் தென் மாவட்டங்களில் 14 மையங்களில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications