எரிந்த நிலையில் ரோட்டில் கிடந்த ”எக்ஸ்பையர்டு” மருந்துகள் குவியல்- மக்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே காலாவதி மருந்துகள் ரோட்டில் எரிந்த நிலையில் கிடந்ததால் பொதுமக்கள் மத்தியில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை அருகே ரகுமத் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்த பகுதியில் குப்பையை அதிகமாக கொட்டி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக இங்குள்ள நான்கு வழி சாலையில் முட்டை ஓடுகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளன.

Nellai people hurts by expired medicines waste

இதிலிருந்து எழும் தூர்நாற்றம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசுகிறது. இதை அகற்ற வேண்டிய மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கண்டுகொள்வதில்லை. ஆயிரக்கணக்கான முட்டை கூடுகளை பொறுப்பற்ற நிலையில் சாலையில் குவித்தவர்கள் யார் என்று தெரியவில்லை.

இதன் அருகே மற்றொரு புரம் காலாவதியான மருந்துகள் மற்றும் மத்திரைகள் மலைபோல் குவிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடக்கின்றன. நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் மருந்துகளுடன் எரியாமல் கிடப்பதால் இவற்றில் இருந்து ரசாயன நொடி வீசுவதால் பலருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது.

இவற்றை பாதுகாப்பாக அளிக்க சட்டப்படி நியாதிகள் உள்ள நிலையில் பின்விளைவு தெரியாமல் அவற்றை பொது இடத்தில் குவித்து அரைகுறையாக எரித்துள்ளனர். இதில் மாநகராட்சி துறையினர் தலையிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+