ஓடும் ரயிலில் செல்பி.... அபராதம் விதிக்க ரயில்வே போலீஸார் யோசனை
ஓடும் ரயிலில் செல்பி எடுப்பதால் ஏற்படும் விபரீதங்களைத் தடுககும் வகையில் அபராதம் விதிக்க நெல்லை ரயில்வே போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
நெல்லை: ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓடும் ரயிலில் செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கவும் நெல்லை போலீசார் முடிவு செய்துள்ளார்.
சமீப காலமாக ஸ்மார்ட் போன்கள் இளைய தலைமுறையின் குடும்ப உறவுகளாகி விட்டன. வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்றவை இளைஞர்களின் தகவல் தொடர்பு வகைகளாக மாறியுள்ளன.

தற்போது செல்பி மூலம் படம் எடுத்து நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பு வருகின்றனர். அதிலும் ரயில் நிலையங்களில் செல்பி தாக்கம் அதிகம். ரயில் முன்பு நின்று கொண்டும், ரயில் நிலையத்தில் அமர்ந்து கொண்டும் செல்பி எடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சில இளைஞர்கள் மொத்தமாக பிளாட்பாரத்தில் நின்று புகைப்படம் எடுக்க குவிகின்றனர். இதனால் எதிர்பாரதவிதமாக விபத்துகள் ஏற்படுகின்றன..
நெல்லை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தண்டவாளம் மற்றும் எஸ்கலேட்டர், நடை மேடைகளில் படம் எடுப்போரை உடனடியாக ரயில்வே போலீஸார் பிடித்து அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். ரயில்களில் ஆபத்துக்குரிய வகையில் படம் எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர் போலீசார்.
நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் இப்படி படம் எடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், ரயில் நிலையங்களில் தேவையில்லால் செல்போனில் படம் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை கடுமையாக்க காலை மற்றும் மாலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications