பாலியல் தொந்தரவு புகார் தெரிவிக்க மாணவிகளுக்கு போஸ்ட் கார்டு கொடுத்த நெல்லை போலீஸ்!
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாணவிகளுக்கு போஸ்ட் கார்டு கொடுத்திருக்கிறது நெல்லை போலீஸ்.
பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் காலம் இது.. தங்களுக்கான தொல்லைகள் குறித்து பகிரங்கமாக அவர்களால் போலீசில் தெரிவிக்க முடியாத நிலைமை இருந்து வருகிறது.

செல்போன்கள் மூலமாக தகவல் தெரிவித்து தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தவும் பெண்கள் தயங்குகின்றனர். இதற்காக நெல்லை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு போஸ்ட் கார்டுகளை போலீசாரே வழங்கியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. விக்ரமன், போஸ்ட் கார்டு திட்டம் மூலம் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து இந்த போஸ்ட் கார்டில் எழுதிப் போடலாம். இதனடிப்படையில் 2 நாட்களில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications