தொடர் மழை.. புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நெல்லை: தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் தொடர் கன மழை பெய்வருகிறது.

மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேலடுக்கு சுழற்சியாக உருமாறியுள்ளது. இந்நிலையில் கடலோர மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துகுடி மற்றும் புதுக்கோட்டையில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் இம்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் கடல் பயங்கர சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கவும் செல்லவில்லை.












Click it and Unblock the Notifications