கலெக்டர் தடையையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள்... நெல்லை மக்கள் அதிர்ச்சி!
நெல்லை: நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சில தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்க கலெக்டர் தடை விதித்திருந்தும் பஸ் நிர்வாகங்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
நெல்லை சந்திப்பு பகுதியிலிருந்து மேலப்பாளையத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகி்ன்றன.
நெல்லை சந்திப்பிலிருந்து மேலப்பாளையத்திற்கு கொக்கிரகுளம், குறிச்சி, மருத்துவமனை செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களில் ரூ.4 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அனுமதி பெற வேண்டும்...
தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
புகார்...
ஆனால் தனியார் பஸ்கள் அதை செய்யாமல் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் செய்தனர்.
எச்சரிக்கை...
இந்நிலையில் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து மாநகர பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது.
அலட்சியமான பதில்...
ஆனால் நெல்லை சந்திப்பு மேலப்பாளையத்திலிருந்து இயக்கப்படும் தனியார் பஸ்சில் மட்டும் தற்போது ரூ.5 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதுகுறித்து கண்டக்டரிடம் கேட்டபோது தனியார் பஸ் நிர்வாகத்திடம் சென்று கேளுங்கள் என அடாவடியாக கூறுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications