ஓம் சக்தி சேகர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு.. நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
புதுவை அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லித் தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
புதுச்சேரி: ஓம் சக்தி சேகர் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
ஜெயலலிதா மறைந்து 2 மாதங்களுக்கு பின்னர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் புதுச்சேரியையும் விட்டுவைக்கவில்லை. தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் ராஜினாமா செய்தேன் என்று வெளியிட்ட தகவலுக்கு பின்னர், புதுவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனால் கோபம் அடைந்த அதிமுக தலைமையால் இன்று அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லித்தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். மருத்துவ அணியின் சேர்ந்த நன்னன் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இதுதவிர, சசிகலாவின் தலைமையை எதிர்த்து புதுவை அதிமுக உறுப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுவை லெனின் சாலையில் ஒன்று கூடிய அதிமுகவினர் சாலை மறியலில் திடீரென ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.