நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிடுக: மதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதிமுக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். அப்போது நேதாஜியைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மேற்கு வங்க அரசின் உயர்கல்வி, பள்ளிக்கல்வி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் துறையின் அமைச்சருமான முனைவர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் ஏராளமான மதிமுகவினர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications