கருணாநிதியை வச்சு செஞ்சு, ஸ்டாலினை பாராட்டும் நெட்டிசன்கள்: ஏன் தெரியுமா?
சென்னை: ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பின் வரிசையில் இடம் ஒதுக்கியும் அங்கு அமர்ந்து நிகழ்ச்சி முடியும் வரை இருந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினை பாராட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பதில் பிசியாகிவிட்டனர். சில மீம்ஸ்களை கலாய்க்கப்பட்ட தலைவர்கள் பார்த்தால் கூட குபீரென சிரிக்கும்படி இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. பின் வரிசையில் இடம் ஒதுக்கியபோதும் அங்கு அமர்ந்து விழா முடியும் வரை இருந்து வாழ்த்திவிட்டு வந்த ஸ்டாலினை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கவில்லை மாறாக மனதார பாராட்டியுள்ளனர்.
இதற்கிடையே ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கியது தொடர்பாக கோபத்தில் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதியை தான் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வச்சு செஞ்சு கொண்டிருக்கின்றனர்.
ஸ்டாலினை சட்டசபையில் பார்த்த ஜெயலலிதா வணக்கம் கூறியதும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications