மாலை வேளையில் சூரிய உதயம்.. கருணாநிதியின் வருகையை கொண்டாடும் நெட்டிசன்ஸ்!
கருணாநிதி வீட்டை விட்டு வெளியே வந்ததை மாலை வேளையில் சூரிய உதயம் என அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வீட்டை விட்டு வெளியே வந்ததை மாலை வேளையில் சூரிய உதயம் என அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பின் வீட்டை விட்டு நேற்று மாலை வெளியே வந்தார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்ற அவர், முரசொலி பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில் கருணாநிதி நேற்று முரசொலி அலுவலகத்திற்கு வந்தது அவரது தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
|
திரும்பி வந்துட்டேன்னு சொல்லு
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!!! வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. என்கிறது இந்த டிவிட்
|
மாலையில் சூரிய உதயம்
#கருணாநிதி.. மாலை வேளையில் சூரிய உதயம்.. என புகழ்கிறார்.. இந்த வலைஞர்..
|
தலைப்புச் செய்தியாக
மறுபடியும் தலைப்புச் செய்தியாக திமுக தலைவர்... என்கிறது இந்த டிவிட்
|
வர்லாம் வா தலைவா
மன தைரியம் என்னை மெர்சால்கியது. லவ் யு தலைவா.. வர்லாம் வா தலைவா... என்கிறார் இந்த வலைஞர்












Click it and Unblock the Notifications