மெரினா கடற்கரையில் இரு சூரியன் உதிக்கும் நாளை முதல்!
சென்னை மெரினா கடற்கரையில் நாளைமுதல் இரு சூரியன் உதிக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: மெரினா கடற்கரையில் நாளைமுதல் இரு சூரியன் உதிக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் மெரினாவில் இடம் ஒதுக்குமாறு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
|
மெரினா தத்தெடுத்துக் கொண்டது
என்ன தவம்
செய்ததோ மெரினா
கடற்கரை..
இன்று சரித்திர
நாயகன் டாக்டர் கலைஞரை மெரினா
தத்தெடுத்துக் கொண்டது..
|
மெரினா வந்த வரலாறு
இனிமேல் மெரினா வரும் குழந்தைகளிடம் கலைஞரின் ஒட்டுமொத்த வாழ்க்கையைப் பற்றி எளிதாக விளக்க அவர் மெரினா வந்த வரலாறை சொல்வதே போதுமானது!
|
இனி மெரினா உன்வசம்
இறந்தும் தோல்வி உன்னை நெருங்கமுடியவில்லையே #தலைவா
இனி மெரினா உன்வசம்
|
அண்ணாவின் பக்கத்தில் தம்பியாய்
இறந்தும் போராடி வென்றாய் உனக்கான இடத்தை, அண்ணாவின் பக்கத்தில் தம்பியாய் "மெரினா"
|
இரு சூரியன் உதிக்கும்
மெரினா கடற்கரையில்
இரு சூரியன்
உதிக்கும்
நாளை முதல்....
|
புனிதம் அடைகிறது
நீ மறைந்த பிறகும் உனக்கும் தமிழ்மொழிக்கும் வெற்றி கிடைத்துள்ளது தலைவா #கருணாநிதி ஐயா, மெரினா மேலும் புனிதம் அடைகிறது #Kalaignar #Karunanidhi
|
என்றென்றும் உயிராய் நீ !
வீழ்ந்தாய்...
என்றெண்ணிய எதிர்மறைகள் முன்
எழுச்சியாய் மீண்டும் எழுந்தாய் எம் தலைவா
#மெரினா
உலகு உள்ளவரை
எத்தனை எதிர்ப்பென்றாலும்,
வெல்லும் வாய்மை நீயே ..
விறகல்ல நீ !
விருட்சம் தரும் விதையாய்
உடன் பிறப்பின் உள்ளங்களில்
என்றென்றும் உயிராய் நீ !
|
நிறைவேற்றிய மகன் "தளபதி"
தந்தையின்
கடமையை
நிறைவேற்றிய
மகன் "தளபதி"
#மெரினா












Click it and Unblock the Notifications