இரும்பை காயலான் கடைக்கு போட்டு ஆஸ்பெட்டாஸ் வாங்கி மாட்டிட்டாரே நாஞ்சில் சம்பத்!
சசிகலா அணியின் நாஞ்சில் சம்பத்தின் 'ஆஸ்பெட்டாஸ் கோட்டையான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி' பதிவை நெட்டிசன்கள் வறுத்து கொண்டிருக்கின்றனர்.
சென்னை: ஜெயலலிதா மறைந்தது முதலே அதிமுகவினர் எப்போபார்த்தாலும் அதிமுக எஃகு கோட்டை; ஆர்கே நகர் எங்கள் இரும்பு கோட்டை என கூவி கூவியே காதில் ரத்தம் வந்துவிட்டது. இப்போது இரும்பை எடைக்கு போட்டுவிட்டார்கள் போல.. அதனால்தான் என்னவோ அதிமுகவின் அசைக்க முடியாத ஆஸ்பெட்டாஸ் கோட்டை ஆர்கே நகர் தொகுதி என நாஞ்சில் சம்பத் எழுதிவிட்டார் என்கின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ்ப் புலமை மிக்கவர் நாஞ்சில் சம்பத்.. அவரது அடுக்குமொழி பேச்சு அனைவரையும் கவரக் கூடியதுதான். ஆனால் சசிகலா அணிக்கு போன பின்னர் என்ன பேசுகிறோம் எதை எழுதுகிறோம் என்பது புரிபடாமல் அடித்துவிட்டு வருகிறார்.

சோறா? வேறா?
அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் எழுதும் பதிவுகளுக்கு வந்து விழுகிற வசைகளுக்கு வகை தொகையே இல்லை. அதுவும் பாத்திமா பாபுவை விமர்சிக்கப் போய், சம்பத் உங்க தட்டில் இருப்பது சோறா?வேறா என நாறடித்துவிட்டார்.

கச்சேரி தொடருகிறது
ஆனால் நாஞ்சில் சம்பத் அசரவில்லை.... தொடர்ந்தும் தம்முடைய தமிழ்ப் புலமையால் சசிகலா அணிக்கான கச்சேரியை நடத்தி வருகிறார்.

ஆஸ்பெட்டாஸ் கோட்டை
இந்த கச்சேரியின் உச்சஸ்தாயில் அவர் பாடிய கவிதைதான் நகைப்புக்குரியதாகிவிட்டது. 'அதிமுகவின் அசைக்க முடியாத ஆஸ்பெட்டாஸ் கோட்டையான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி' என இன்று பதிவிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.

இரும்பை எடைக்கு எடை போட்டாரோ?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஒரு எஃகு கோட்டை; ஆர்.கே.நகர் தொகுதி அதிமுகவின் இரும்புக் கோட்டை என்றே கூறி வந்தனர். இப்போது இரும்புக் கோட்டையை ஆஸ்பெட்டாஸ் கோட்டையாக்கிவிட்டார் நாஞ்சில் சம்பத். அதனால்தான் இரும்பை எடைக்கு எடை போட்டு இப்போது ஆஸ்பெட்டாஸ் வாங்கி மாற்றிவிட்டார் என சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications