ஜல்லிக்கட்டு..பொங்கி எழுந்த புதுக்கல்லூரி மாணவர்கள்... மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
சென்னை: சென்னையில் வலுத்து வருகிறது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள். புதுக்கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் நெருங்கிவிட்டது நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வெடித்துள்ளன. அந்த வகையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இது போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாணவர்களை மேலும் உற்சாசப்படுத்தியுள்ளார்கள்.
போராட்டத்தின் போது, மாணவர்கள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்தியே ஆக வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், மத்திய மாநில அரசுகள் இதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம், புதுக்கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று கோரி மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications