லெஹர் புயலால் தமிழகத்திற்கு ஆபத்து வருமா...?- சிதம்பரத்தில் கன மழை
சென்னை: அந்தமான் அருகே உருவெடுத்துள்ள புதிய லெஹர் புயலால் தமிழகத்திற்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், புயல் அதி தீவிரப் புயலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போதுதான் ஹெலன் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் தமிழகத்திற்கு மழை பெரிய அளவில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வங்கக் கடலில் மீண்டும் அந்தமான் அருகே புதிய புயல் உருவாகியுள்ளது.
இந்தப் புயல் இந்தியாவின் முக்கிய கரைப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இருப்பினும் இதன் தாக்கம் படு தீவிரமாக இருக்கும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று புயல் எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தமிழகத்துக்கு ஆபத்து இல்லை.. ஆனால் மழை பெய்யலாம்
இப்போதைய நிலவரப்படி இது தமிழகத்தை தாக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு என்று தெரிகிறது. அதேசமயம், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நல்ல மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரத்தில் கன மழை
சிதம்பரத்தில் இன்று அதிகாலை முதல் கன மழை கொட்டி வருகிறது. இதனால் சிதம்பரத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அங்கு 59 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
நகரின் அனைத்து சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மழைநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. தொடர் கன மழையால் தில்லையம்மன் கோயில் குளத்தை சுற்றி இந்து அறநிலையத் துறையினரால் சமீபத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கனமழையினால் நகரே ஸ்தம்பித்துப் போய் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் அதிகாலையில் லேசான மழை
சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் சில இடங்களில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது.
தமிழகம் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஞாயிற்றுக்கிழமை பெய்யும். சென்னையைப் பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications