அட..! அதிசயத்தப் பாருங்களேன்...மாட்டு வண்டியில புதுமண ஜோடி ஊர்வலம்! - வீடியோ
காரைக்குடியில் புதுமணத் தம்பதிகளான கிருஷ்ணா - கீர்த்தி ஜோடி மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினர்.
காரைக்குடி: காரைக்குடியில் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் சுற்றத்தாருடன் ஜோடியாக வந்தது அனைவரையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் திருமணத்தில் மட்டும் 2000 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இன்றைய காலகட்டத்தில், ஒரு கான்செப்ட் உருவாக்கப்பட்டு அதன்படி திருமணம் நடக்கிறது.
திருமணத்துக்காக தன் வாழ்நாள் சேமிப்பை எல்லாம் செலவு செய்யும் பெற்றோர் அதிகம். இந்நிலையில் காரைக்குடியில் கிருஷ்ணா என்பவருக்கும் கீர்த்தி என்ற மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின், தற்போது மணமக்கள் பெரும்பாலும் காரில் தான் ஊர்வலம் வருகிறார்கள். ஆனால் கிருஷ்ணா- கீர்த்தி தம்பதி அழகாக அலங்காரம் செய்யப்பட்ட மாட்டுவண்டியில் ஊர்வலம் வந்தனர். அதில் மணமகன் மாட்டு வண்டியின் சாரதியாகி வண்டியோட்ட, மணமகள் சிரிப்புடன் வந்த காட்சி அனைவர் மனதையும் கொள்ளை கொள்வதாக இருந்தது.