கருத்துக்கணிப்பு: அரசு கேபிளில் நியூஸ் 7 துண்டிப்பு- ஆபிசை கொளுத்துவோம் என மிரட்டல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையையோட்டி நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் தினமலர் செய்திதாளும் இணைந்து நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நியூஸ்7 தமிழ் செய்தியாளர் சஞ்ஜீவியை அதிமுகவினர் தாக்க முயற்சி செய்தனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தை கொளுத்துவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கருத்துக்கணிப்புகள் வெளியாவதை விரும்பாததால், அரசு கேபிள் டிவியிலிருந்து நியூஸ்7 சேனல் ஒளிபரப்பை மாநிலத்தின் பல இடங்களில் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் எந்தக் கூட்டணி அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என கடந்த 3 நாட்களாக தினமலர் நாளிதழும், நியூஸ்7 சேனலும் மண்டலவாரியாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

அதிமுகவிற்கு எதிரான அலை
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை எனக் கருதப்படுகிறது. கருத்துக்கணிப்பின் முதல்கட்டமாக, மேற்கு மண்டலத்தில் உள்ள 57 தொகுதிகளில், திமுக 34 தொகுதிகளிலும், அதிமுக 23 தொகுதிகளில் வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்து
தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடக்கு மண்டலம் என தமிழகம் முழுவதும் திமுக அலை வீசுவதாகவே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சேனலை கொளுத்துவோம்
அதிமுக அரசின் தேர்தல் அறிக்கை தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகம் சென்ற செய்தியாளர் சஞ்ஜீவியை அங்கிருந்த அதிமுகவினர் தாக்க முற்ப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கருத்துக்கணிப்பால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தை கொளுத்துவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சேனல் துண்டிப்பு
கருத்துக்கணிப்பால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைமை மேற்கொண்டு பிற மண்டலங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாவதை விரும்பாததால், அரசு கேபிள் டிவியிலிருந்து நியூஸ்7 சேனல் ஒளிபரப்பை மாநிலத்தின் பல இடங்களில் துண்டித்துவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இயக்குநர் மாற்றம்
அரசு கேபிள் டிவியின் தலைவராக இருப்பவர், அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் என்பதால் அதிகாரிகளின் துணைகொண்டு அதிமுக இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அரசு கேபிள் டிவியில் அதிமுகவுக்கு எதிர் நிலைப்பாடுகள் கொண்ட சேனல்களின் ஒளிபரப்புத் துண்டிக்கப்படுவதாக பல கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் மாற்றப்பட்டார். ஆனாலும் ராதாகிருஷ்ணன் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படவில்லை.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருமா?
அரசு கேபிள் டிவியைத் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அதிமுகவுக்கு பாதகமாக கருத்துக்கணிப்பு வெளியிட்டதால் நியூஸ்7 சேனல் ஒளிபரப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதும், சேனலை கொளுத்துவோம் என்று அதிமுகவினர் மிரட்டியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications