அனல்மின் நிலைய ஊழியர்களிடையே மோதல்- 6 வீடுகளுக்கு தீ வைப்பு: நெய்வேலி அருகே பதற்றம்
நெய்வேலி: நெய்வேலி அனல்மின் நிலைய ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் நயினார்குப்பத்தில் ஆறு வீடுகளுக்கு தீ வைக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் புதிய அலகு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நயினார்குப்பம் மற்றும் பெரியகாப்பான்குளம் கிராமங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மிகுந்த பரபரப்பு உண்டானது.

இதையடுத்து நேற்று இரவு நயினார்குப்பத்தில் உள்ள 6 வீடுகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் நயினார்குப்பம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இருதரப்பினருக்கும் இடையே எந்நேரமும் மீண்டும் மோதல் வெடிக்கக் கூடும் என்பதால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications