காவிரி டெல்டாவில் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம்- மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஷேல் கேஸ் எனப்படும் பாறை எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களை செயல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.

இதனிடையே ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் தொடர்பான வழக்கு சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆஜராகி இருந்தார்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசின் நிலை குறித்து விளக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இவ்வழக்கின் விசாரணை வரும் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications