ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!

ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியை மேற்கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியை செய்து வந்த ஓட்டேரியைச் சேர்ந்த ஒருவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணி, நிதி திரட்டும் பணி, சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது, சிலர் சிரியா செல்வதற்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் தெரிந்தது.

NIA makes one arrest in Chennai ISIS case

இந்த பணிகளுக்காக தமிழகம், கேரளத்தில் இருந்து இளைஞர்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டு ஆள் சேர்ப்பதாக வந்த தகவலை அடுத்து என்ஐஏ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் சென்னையில் விசாரணை நடத்தியபோது ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது ஆள் சேர்க்கும் பணியை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ முகமையால் அவர் கைகு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+