நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 11 சென்டிமீட்டரும், வால்பாறையில் 9 சென்டிமீட்டரும், பொள்ளாச்சியில் 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு