மாஜி உளவுத்துறை ஐஜி டேவிட்சன் முக்கியத்துவம் இல்லாத காவலர் நலன் ஐஜியாக நியமனம்!!
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் காவல்துறையில் அடுத்தடுத்து இடமாற்ற அறிவிப்புகள் தொடங்கியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கோரி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, காவல் துறையில் இடமாற்ற அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
தற்போது ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரமாவது:-
1.சேஷசாயி (திருப்பூர் கமிஷனர்) - கூடுதல் ஆணையர் (வடக்கு ) சட்டம் ஒழுங்கு சென்னை
2. மஞ்சுநாதா (வடக்குமண்டல ஐஜி) - திருப்பூர் கமிஷனர்
3.எஸ்.டேவிட்சன் ஆசிர்வாதம் (காத்திருப்போர் பட்டியல்) - ஐஜி காவலர் நலன் சென்னை
4.எஸ்.சங்கர் (மேற்கு மண்டல ஐஜி ,கோவை) - கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு ,சென்னை(தெற்கு)
5. ஸ்ரீ தர் (கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு , சென்னை (தெற்கு )) - மேற்கு மண்டல ஐஜி ,கோவை
6. செந்தாமரை கண்ணன் (ஐஜி, ஆபரேஷன்ஸ்) - ஐஜி மத்திய மண்டலம் , திருச்சி
7.எச். ஜெயராம் (ஐஜி, காவலர் நலன், சென்னை) - கூடுதல் ஆணையர் போக்குவரத்து காவல் சென்னை.
8.பி.தாமரை கண்ணன் (கூடுதல் ஆணையர் போக்குவரத்து காவல் ,சென்னை) - வடக்கு மண்டல ஐஜி
9. சந்திப் ராய் ரத்தோர் (ஐஜி, மத்திய அரசு பணி) - ஐஜி, கடலோர பாதுகாப்பு பிரிவு ,சென்னை.












Click it and Unblock the Notifications