சென்னை சிறுவன் கொலை விவகாரம்.. தாயின் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
Recommended Video

சென்னை: 9 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலன் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி மஞ்சுளா. மஞ்சுளத மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களின் மகன் ரித்திஷ், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சிறுவன் டியூஷன் சென்றுள்ளான்.

பொய் சொல்லி கடத்தல்
இரவு 8.30 மணிக்கு கார்த்திகேயேன் தனது மகன் ரித்திஷை அழைக்க டியூஷன் சென்றபோது அங்கு சிறுவன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது சிறுவன் எங்கே என விசாரித்த போது நாகராஜ் என்பவர் கண் சிகிச்சைக்காக அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை
இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் எம்ஜிஆர் நகர் போலீஸில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜின் தொலைபேசி எண்ணை ட்ராக் செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இன்று காலை வேலூர் பேருந்து நிலையத்தில் நாகராஜ் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

மூளை சிதறி உயிரிழப்பு
அப்போது நேற்றிரவே சிறுவனை சேலையூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கொன்று விட்டதாக நாகராஜ் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சேலையூர் வீட்டில் சென்று பார்த்தனர்.
அங்கு சிறுவன் ரித்திஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். அவனது தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு மண்டை உடைந்து மூளை சிதறி கிடந்தது. கழுத்திலும் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது.

சூப்பர்வைசர் பணி
நாகராஜுக்கும், சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் கள்ளக்காதல் இருந்ததும் அதனால் ஏற்பட்ட தகராறில் சிறுவனை நாகராஜ் கொலை செய்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக நாகராஜ் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் தான் சேலையூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசர் மற்றும் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பல முறை உல்லாசம்
தனக்கும், கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது என்றும் இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். சிறுவன் ரித்திஷ் சாயை தான் பலமுறை டியூஷனில் இருந்து அழைத்து சென்று மஞ்சுளாவின் வீட்டில் விட்டிருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

போலீஸில் புகார்
தங்களின் கள்ளக்காதல் கார்த்திகேயனுக்கு தெரியவந்ததால் தங்களை அவர் கண்டித்ததாகவும் ஆனாலும் தங்களின் கள்ளத்தொடர்பை துண்டிக்கவில்லை என்றும் நாகராஜ் தெரிவித்துள்ளார். கார்த்திகேயன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தன் மீது எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து என்னை ஜெயிலுக்கு அனுப்பினார் என்றும் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

சேலையூர் குடியிருப்பு
இதனால் மனம் உடைந்ததால் அவரை பழிவாங்க சிறுவன் ரித்திஷை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். நேற்று மாலை ரித்திஷை டியூஷன் வகுப்பில் இருந்து அழைத்துக் கொண்டு சேலையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றதாக தெரிவித்தார்.

பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தி
பின்னர் அவனது கழுத்தில் பீர் பாட்டிலை உடைத்து குத்தியதாகவும் இதனால் ரித்திஷ் கத்தியதால் இரும்பு கம்பியால் சிறுவனின் தலையில் அடித்ததில் சுருண்டு விழுந்து இறந்ததாகவும் நாகராஜ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications