நான் ஊர் சுற்றும் அமைச்சரா?.. சொன்னா சொல்லிட்டு போங்க.. எனக்கு பொழுது போகுது.. நிர்மலா சீதாராமன்
சென்னை: நான் ஊர் ஊராக சுற்றினாலும் எனது துறை சார்ந்த பணிகளை செய்யாமல் விட்டது கிடையாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்ட விளக்கக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை பார்வையாளர்கள் அதற்கான அட்டைகளில் எழுதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சமர்ப்பித்தனர். நிகழ்ச்சி நிறைவில் பார்வையாளர்கள் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்து கொண்டிருந்தார்.

நிர்மலா
நிதி அமைச்சராக இருந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஊர் ஊராக போய் விளக்கம் அளிக்கிறீர்களே. இதனால் உங்கள் வேலை பாதிக்காதா என ஒருவர் நிர்மலாவிடம் கேட்டார்.

மக்கள்
இதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், இன்னும் 10 நாட்களில் பட்ஜெட் வர இருக்கிறது. அரசின் நிர்வாகத்தை நல்ல விஷயங்களை அமைச்சர்கள், அதிகாரிகள் மக்களிடம் கொண்டு செல்வது தவறானது கிடையாது.

பொருளாதாரம்
அண்மையில் பிரதமருடனான ஒரு ஆலோசனை கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. இதனால் எனக்கு பொறுப்பு இல்லை, நான் இப்படி இருப்பதால்தான் பொருளாதாரம் சீரழிக்கிறது என சிலர் கடுமையாக விமர்சித்தனர்.

கொஞ்சம்
என் துறையை நான் நல்லபடியாகவே பார்த்து கொள்கிறேன். ஊர் ஊராக சுற்றினாலும் எனது பணியை நான் செய்யாமல் விட்டது கிடையாது. என் மீதான விமர்சனங்களை நான் ரசிக்கிறேன். இதனால் எனக்கு கொஞ்சம் பொழுது போகிறது என்றார் நிர்மலா சீதாராமன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications