பல்லாவரம் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பில் நித்தியானந்தா சீடர்கள் அடாவடி!
நித்யானந்தா சீடர்கள், புறம்போக்கு நிலத்தில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் மக்களை காலி செய்ய சொல்லி, மிரட்டி அடாவடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை பல்லாவரம் மலைப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 45 ஆண்டுகளாக குடியிருக்கும் 17 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை காலி செய்யச் சொல்லி நித்யானந்தாவின் சீடர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லாவரம் 11ஆவது வார்டு பச்சையம்மன் கோயில் தெருவில் அரசு மலைப் புறம்போக்கு இடம் உள்ளது. இதில் கடந்த 45 ஆண்டுகளாக 17 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் ராமநாதன் என்பவர் இந்த இடம் என்னுடையது என கூறி தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்ந்நிலையில், இருதரப்புக்கும் இடையே பல்லாவரம் தாசில்தார் கௌசல்யா அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ராமநாதன் தரப்பில் அவரது மகள் வள்ளி கலந்துகொண்டுள்ளார். அவர் நித்தியானந்தாவின் சீடர்கள் என கூறி நான்குபேரை அழைத்து வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இதுகுறித்து தாசில்தார் கௌசல்யா கூறுகையில், இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் செல்வோம். இரு தரப்பினரிடமும் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளோம்.மேலும் குடியிருப்பு சான்று ஆவணங்களையும் கேட்டுள்ளோம். அந்த சான்றுகள் கிடைத்தவுடன் அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து அவரின் முன்னிலையில், இதற்கு தீர்வு காணப்படும்.
அதுவரை இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என கூறினார். அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 45 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை காலி செய்யச் சொல்லி நித்யானந்தாவின் சீடர்கள் மிரட்டுகிறார்கள். எங்கள் பகுதியில் அவர்கள் வந்து குடிசை போட்டு தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் நித்யானந்தா சீடர்கள் போட்டுள்ள குடிசைகளுக்கு சட்டவிரோதமாக மின் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது என புகார் கூறினார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications