இளைய ஆதின நியமன வழக்கு – நித்தியனந்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றம்!
மதுரை: மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்ததற்கு மதுரை கோர்ட் விதித்த தடையை நீக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து விட்டது.

மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் தற்போது பதவி வகித்து வருகிறார். அந்த மடத்தின் 293-வது மடாதிபதியாக அதாவது இளைய மடாதிபதியாக நித்தியானந்தாவை கடந்த 22.4.2012 அன்று அருணகிரிநாதர் நியமனம் செய்தார். இது பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பியது. மதுரை ஆதீன மடத்திற்கு நித்தியானந்தா வந்தபோது பெரும் போராட்டங்களும் நடந்தன.
இந்த நிலையில், ஆதீன மடத்தின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் மதுரை மாவட்ட முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அருணகிரிநாதர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமனம் செய்தது ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள முக்கிய வழக்கு முடிவடையும் வரை மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து 26.2.2013 அன்று சப்-கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார். அதில், இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த மனுவில் என்னை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை. எனது தரப்பு விளக்கத்தை கீழ்கோர்ட் கேட்கவில்லை. எனவே, கீழ்கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அருணகிரிநாதர் தரப்பில் வக்கீல்கள் நாகேந்திரன், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார். இறுதியில் நித்தியானந்தாவின் அப்பீல் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதுகுறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், மதுரை ஆதீன மடத்தின் ஆவணங்களை பார்க்கும் போது, ஒரு மடாதிபதி உயிருடன் இருக்கும்போது இன்னொருவரை மடாதிபதியாக நியமிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதேபோன்று மடாதிபதியாக நியமிக்கப்படுபவர் என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை நித்தியானந்தா பூர்த்தி செய்யவில்லை.
நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்து பிறப்பித்த உத்தரவை அருணகிரிநாதர் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதுதொடர்பான வழக்கு தனியாக உள்ளது. எனவே, கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என்று நீதிபதி கூறி விட்டார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications