பளு தூக்கும் போட்டியில் 8 தங்கப்பதக்கம் வென்ற நிவேதாவுக்கு உற்சாக வரவேற்பு - வீடியோ
சேலம் மாணவி நிவேதா பளு தூக்கும் போட்டியில் 8 தங்க பதகக்ங்களை வெண்ரு சேலம் திஒரும்பிய போது அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சேலம்: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 8 தங்கம் வென்ற நிவேதாவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகள் நிவேதா. அவர் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பளு தூக்கும் போட்டியில் பங்குகொண்டு பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த நடந்த காமென்வெல்த் சப் ஜூனியர் பளு தூக்கும் போட்டியில்பங்கு பெற்ற நிவேதா போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்றார். அதனையடுத்து சேலம் திரும்பிய அவருக்கு சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்வலமாகச் சென்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் நிவேதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெற்றியைக் கொண்டாடினர். நிவேதா மூன்றாம் வகுப்புப் படிக்கும் போதிலிருந்து பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.