For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இப்போதைக்கு புயல் அபாயம் இல்லை.. சென்னை வானிலை மையம் தகவல்
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறாது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்திற்கு தற்போது புயல் வருவதற்கான வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அவ்வானிலை மையத்தின் இயக்குநர் ஸ்டெல்லா இன்று மதியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறாது எனவும் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் இன்னொரு புயல் அபாயத்திலிருந்து தப்பியுள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.
Comments
English summary
No cyclone threat for Tamilnadu as of now, says TN wheather department.
Story first published: Tuesday, December 20, 2016, 13:09 [IST]