வாக்குப்பதிவு தாமதமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு கிடையாது: பிரவீண்குமார்
சென்னை: எதிர்பாராத காரணங்களால் வாக்குப்பதிவு தாமதமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்க இயலாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சில மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் மாற்று எந்திரங்களுடன் வாக்குப்பதிவு தொடங்கப் பட்டது.
இதனால் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால், அவ்வாறு காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு செய்ய இயலாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், மாலை 6 மணி வரை வரிசையில் நின்று டோக்கன் பெறுபவர்கள் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications